மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: புதியநீதி கட்சி சார்பில் போட்டி
முதற்கட்டமாக, அ.தி.மு.க. சார்பில் மதுரை மத்தி தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. துணை தலைவரான நடிகை குஷ்புவின் கணவரும், பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டவுடன் வரும் திங்கட்கிழமை இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்.
மதுரை மத்திய தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
