மும்பை, வான்கடே மைதானத்தில் நாளை நடக்கும் ‘டி-20’ உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. 2022ல் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தியது. பின் சாம்பியன் பட்டம் வென்றது. 2024ல் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சாய்த்தது. இறுதியில் இந்தியா கோப்பை வென்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. கடந்த பிப்ரவரியில் இதே மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ‘டி-20’ போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. அப்போது அபிஷேக் சர்மா 54 பந்தில் 135 ரன் (7×4, 13×6) விளாசினார். இவர் மீண்டும் அசத்த வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹாரி புரூக் கைகொடுக்கலாம்.
இந்தியா-இங்கிலாந்து ரகசியம்… * சாம் கர்ரான் சூசகம்
By Suhas
0
22
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES